உள்ளூர் செய்திகள்

கோவையில் மதுகுடிக்க பணம் தர மறுத்த வாலிபர் மீது தாக்குதல்

Published On 2022-11-23 09:35 GMT   |   Update On 2022-11-23 09:35 GMT
  • எலக்ட்ரிசீயன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
  • சக்திவேல் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த நண்பரான அஜய்குமார் என்பவரது சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார்

கோவை,

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கங்கா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) . தனியார் நிறுவன ஊழியர்.

சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த தனது நண்பரான அஜய்குமார் என்பவரது சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

பின்னர் வீட்டிற்கு நடநது சென்றார். அப்போது அங்கு வந்த திருமூர்த்தி நகரை சேர்ந்த எலக்ட்ரிசீயன் இளவரசன் (20), விஷ்ணு (20) ஆகியோர் சக்திவேலிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சக்தி வேலை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தாக்கிய இளவரசன், விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.                                                                                                       

Tags:    

Similar News