search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attack on teenager"

    • எலக்ட்ரிசீயன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    • சக்திவேல் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த நண்பரான அஜய்குமார் என்பவரது சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார்

    கோவை,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கங்கா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) . தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த தனது நண்பரான அஜய்குமார் என்பவரது சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    பின்னர் வீட்டிற்கு நடநது சென்றார். அப்போது அங்கு வந்த திருமூர்த்தி நகரை சேர்ந்த எலக்ட்ரிசீயன் இளவரசன் (20), விஷ்ணு (20) ஆகியோர் சக்திவேலிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சக்தி வேலை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தாக்கிய இளவரசன், விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.                                                                                                       

    • அருண் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண் (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவைப்புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கடைக்கு புரோட்டா வாங்குவதற்காக சென்றார். ஓட்டல் உரிமையாளரிடம் 8 புரோட்டா கேட்டார். பின்னர் வீட்டிக்கு சென்று திறந்து பார்த்த போது புரோட்டா குறைவாக இருந்தது. இதனையடுத்து அருண் ஓட்டலுக்கு சென்று உரிமையாளரிடம் இது குறித்து கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளார் சத்திரக் (22) மற்றும் அவரது நண்பர் ராஜா சந்திரன் (32) ஆகியோர் சேர்ந்து இரும்பு நாற்காலியால் அருணை தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    ×