உள்ளூர் செய்திகள்

திருக்கழுகுன்றம் அருகே தோழியை பார்க்க சென்ற வாலிபர் மீது தாக்குதல்

Published On 2023-10-16 06:52 GMT   |   Update On 2023-10-16 06:52 GMT
  • மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்ததாக தெரிகிறது.
  • புகாரின் பேரில் சஞ்சய், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுகுன்றம் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பரத்(20). பாண்டூர் பகுதியில் உள்ள பெண்தோழி ஒருவரை சந்திக்க சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பரத்தை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பாண்டூர் பகுதியை சேர்ந்த 2 பேரை பரத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சய், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News