உள்ளூர் செய்திகள்

3 மாதங்களாக மூடிக்கிடக்கும் ஏ.டி.எம்- வாடிக்கையாளர்கள் அவதி

Published On 2022-08-05 09:29 GMT   |   Update On 2022-08-05 09:29 GMT
  • விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது.
  • பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் பூவைத்தேடி காமேஸ்வரம் வேட்டைக்காரன்இருப்பு, புதுப் பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது

இந்த ஏ.டி.எம் சுமார் 3 மாத காலமாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் பணம் போடவும், எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் பணம் போடு வதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வங்கி நிர்வாகம் உடனடியாக ஏ.டி.எம்-யை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News