உள்ளூர் செய்திகள்

தடகளப்போட்டி தொடக்கவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகளப்போட்டி

Published On 2022-09-15 09:14 GMT   |   Update On 2022-09-15 09:14 GMT
  • கடையநல்லூர் வட்ட அளவில் நடைபெற்ற மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி தொடங்கி வைத்தார்.
  • 50 உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்

தென்காசி:

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளி மைதானத்தில் கடையநல்லூர் வட்ட அளவில் நடைபெற்ற மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி தொடங்கி வைத்தார்.

தேசியக் கொடியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசியும், ஒலிம்பிக்கொடியை மாவட்ட தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் கவிதாவும், பள்ளியின் கொடியை வட்டாரக் கல்வி அலுவலர் மகேஸ்வரியும் ஏற்றி வைத்தனர்.

50 உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பக்கீர் முகம்மது செய்திருந்தார். முதல்நாள் மாணவர்களுக்கான போட்டிகளில் சுமார் 690 மாணவர்கள் கலந்து கொண்டனர். 2-வது நாள் மாணவியர்களுக்கான போட்டிகளில் சுமார் 660 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாக உறுப்பினர் முகம்மது அனீஸ் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் . தாருஸ்ஸலாம் பள்ளி தலைமை ஆசிரியர் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ஜபருல்லா தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் புளியங்குடி டி.எஸ்.பி.அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் நாராயணன், எவரெஸ்ட் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News