உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் கிளை நூலகத்தில் நடந்த போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடிய காட்சி. 

பரமத்திவேலூர் கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

Published On 2023-05-17 07:37 GMT   |   Update On 2023-05-17 07:37 GMT
  • பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புத்தகம் படித்தல், கணினி பயன்பாடு, கதை சொல்லுதல், கைவினை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பரமத்திவேலூர் 2-ம் நிலை கிளை நூலகர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News