உள்ளூர் செய்திகள்

பாபநாசத்தில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

பாபநாசத்தில், வணிகர் சங்க கூட்டம்

Published On 2023-05-08 07:43 GMT   |   Update On 2023-05-08 07:43 GMT
  • சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும்.
  • அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

பாபநாசம்:

பாபநாசத்தில் வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.

சங்க செயலாளார் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசி வணிகர் சங்க பொதுக்குழு தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, ரவா, தயிர் போன்றவற்றிற்கு விதிக்கப்ப டும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

பாபநாசம் ரெயில் நிலைய த்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விரைவு ரெயில்களையும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் செயற்குழு உறுப்பினர் அசோகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News