உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, ஓசூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2022-08-07 12:15 IST   |   Update On 2022-08-07 12:15:00 IST
  • 138 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • நசாத்திகலாம், அவுதாகலாம் ஆகிய 2 இருவரையும் ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் புகையிைல பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் 5 ரோடு பகுதியில் உள்ள பெட்டிகடையில் சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளர் தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 138 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஓசூரில் புகையிலை பொருட்கள் பெட்டிக்கடையில் வைத்திருந்ததாக நசாத்திகலாம், அவுதாகலாம் ஆகிய இருவரையும் ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News