உள்ளூர் செய்திகள்
சூளகிரி காவல் நிலைத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- காவல் நிலைய செயல் பாடுகள் குறித்து அறிந்தனர்.
- படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சூளகிரி,
சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் சூளகிரி காவல் நிலைத்திற்கு சென்று காவல் நிலைய செயல் பாடுகள் கூறித்து அறிந்தனர்.
காவல் ஆய்வாளர் ரஜினி மாணவர்களிடம் அங்கு காவல் நிலையத்தில் அரசு விதி முறைகளையும், சட்ட திட்டம் குறித்தும் விவரித்து கூறினார். மாணவர்களுக்கு குடி, போதை, , கஞ்சா, திருட்டு, அடிதடி, கொலை,குற்றங்களில் ஈடுபடாமலும் மற்றும் நன்கு படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள் மனோகரன், வெங்கடேஷ் மற்றும் காவலர்கள், ஆசிரியர்கள்,என்.எஸ்.எஸ். ஆசிரியர் கணேசன் , மற்றும் ஆசியர்கள் மாதேஷ்வரன், விஜயக்குமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.