உள்ளூர் செய்திகள்
சேரன்மகாதேவி அருகே ஜோதிடர் தூக்கு போட்டு தற்கொலை
- அய்யப்பன் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார்.
- குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த அய்யப்பன் மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் குடுகுடுப்பான் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அய்யப்பன் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அய்யப்பன் மனைவியை அடித்து உதைத்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அய்யப்பன் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.