உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-11-05 15:01 IST   |   Update On 2022-11-05 15:01:00 IST
  • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் போலீசார் பூண்டி மனதான்குளம் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற பூண்டி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பனின் மகன் அறிவழகனை(வயது 26) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News