உலக மக்கள்தொகை தின உறுதிமொழி பேரணி
- உலக மக்கள்தொகை தின உறுதிமொழி பேரணி நடந்தது
- சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழியுடன் பேரணி நடத்தப்பட்டது
பேரணியில் காலை 8:30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அதனை தொடர்ந்து சுகாதார நிலையம் முன்பு புற நோயாளிகளுடன் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் பின்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து திருமானூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரை மாணவர்கள் மருத்துவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சுகாதார மேற்பார்வையாளர்கள் போன்றோர் பேரணையாக நடந்து சென்று மக்கள் தொகை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் சிந்துஜா மருத்துவர் முன்னிலை வகித்தார் சுகாதார மேற்பார்வையாளர் வகில். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் தமயந்தி உமா .சீதாராமன். நரேந்திரன். கருப்பண்ணன். ஜோயல். விவின் போன்ற சுகாதார நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர் பேரணிக்கு திருமானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் செல்போன் ஆப்பை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு மாணவிகளுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் ஆப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு விளக்கமளித்தார்.