உள்ளூர் செய்திகள்

டீக்கடை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-23 15:03 IST   |   Update On 2022-08-23 15:03:00 IST
  • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மனைவி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 58). இவர் டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்றுவிட்டு, மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவரது மனைவி அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி "

Tags:    

Similar News