உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2022-12-05 14:17 IST   |   Update On 2022-12-05 14:17:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
  • தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் மழை நீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர் நகர் பகுதியான மார்க்கெட், வெள்ளாளத் தெரு,ராஜாஜி நகர், புதுமார்க்கெட்,கல்லூரி சாலை, செந்துறை சாலை, திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags:    

Similar News