உள்ளூர் செய்திகள்

கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு

Published On 2022-12-17 15:12 IST   |   Update On 2022-12-17 15:12:00 IST
  • கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடந்தது
  • திரளான பக்தர்கள் வழிபட்டனர்

அரியலூர்:

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி அரியலூர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

Tags:    

Similar News