உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-12-19 10:35 GMT   |   Update On 2022-12-19 10:35 GMT
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டியில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் தெற்கு பகுதியில் ஒரு மயானம் உள்ளது. இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மயானத்தில் போதிய இட வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News