உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற முதியவர் கைது

Published On 2023-02-14 10:54 IST   |   Update On 2023-02-14 10:54:00 IST
20 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்படி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பிச்சனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற காலனித் தெருவைச் சேர்ந்த ஜெயராமனை (வயது 70) கைது செய்து அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News