உள்ளூர் செய்திகள்
உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரி டிரைவர் கைது
- உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- உதவி புவியாளர் , சுரங்கத்துறை ஆய்வாளர் வாகன சோதனை ஈடுபட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பகுதியில் திருச்சி உதவி புவியாளர் நாகராஜன் மற்றும் அரியலூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதியின்றி 3 யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் விருத்தாசலம் மாவட்டம் கூவநல்லூர் தனசேகரனை (வயது 37) போலீசார் கைது செய்தனர்.