உள்ளூர் செய்திகள்
கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
- கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- சிறுமிக்கு பாலியல் தொல்லை புகாரில்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஜெயக்குமார் (வயது22) . கூலித் தொழிலாளியான இவர், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கரைமேடு முந்திரி காட்டிலுள்ள தமக்கு சொந்த வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயக்குமாருக்கு உடந்தையாக இருந்தாக அவரது தாய் சாந்தியையும் காவல் துறையினர் கைது செய்து திருச்சி காந்திசந்தையிலுள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.