உள்ளூர் செய்திகள்

இருளரின மக்கள் போராட்டம்

Published On 2022-11-09 14:47 IST   |   Update On 2022-11-09 14:47:00 IST
  • இருளரின மக்கள் போராட்டம் நடத்தினர்
  • சுடுகாடு வேண்டி நைடபெற்றது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு, கோவில் மற்றும் குடியிருப்பு பாதை கேட்டு மணகெதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருளரின மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாநில இருளர் கூட்டமைப்பு தலைவர் இருளபூசெல்வகுமார் தலைமை தாங்கினார்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் வரை நீடித்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, உடையார்பாளையம் தனி தாசில்தார் கலைவாணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை மூலம் காட்டில் தேவையான இடத்தினை அளந்து திட்ட முன்மொழிவை தயாரித்து, மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News