உள்ளூர் செய்திகள்

உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-03-28 06:23 GMT
  • செங்குந்தர் பருத்திப்பட்டு நெசவாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
  • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உறுப்பினர்களை நீக்கியதாக குற்றச்சாட்டு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் 4 வது குறுக்கு தெருவில் உள்ள செங்குந்தர் பருத்தி பட்டு நெசவாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 165 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் பாவு வாங்கி புடவை நெய்து வந்த நிலையில் ஒரு சில குடும்ப காரணம், உடல் நலக்குறைவு காரணமாக புடவை நெய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.இந்நிலையில் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக பட்டு நெய்வதற்கு பாவு வாங்க வந்த போது கூட்டுறவு சொசைட்டி உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டனர். ஆகையால் பாவு இல்லை என கூறி உள்ளனர்இதனையடுத்து தொடர்ந்து ஒருமாத காலமாக இழுத்தடிப்பு செய்தும் வந்துள்ளனர்நீக்கம் செய்யப்பட்டதற்கு எந்தவித முன் அறிவிப்பும் வழங்க வில்லை என கூறி ஆத்திரமடைந்த நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க அலுவலகத்தில் சுமார் 10 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதனையடுத்து கூட்டுறவு சொசைட்டி தலைவர் லலிதா புருஷோத்தமன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குள் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்

.

Tags:    

Similar News