உள்ளூர் செய்திகள்

ஏலாக்குறிச்சியில் - சுகாதாரமற்ற 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ்

Published On 2023-11-19 06:00 GMT   |   Update On 2023-11-19 06:00 GMT
  • அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்த ஐந்து இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
  • புகையிலைப் பொரு ள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.1,100 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்த ஐந்து இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

திருமானூர் வட்டார சுகாதார மேற்பா ர்வை யாளர் வகீல் தலைமை யிலான சுகாதார ஆய்வா ளர்கள் குமார் மற்றும் சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏலாக்கு றிச்சி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இறைச்சி கடைகள் நடத்திய வருக்கும், டெங்கு கொசுக்கள் உருவா கும் வகையில் இருப்பி டங்களை வைத்திருந்த 2 நபர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும், பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொரு ள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.1,100 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News