உள்ளூர் செய்திகள்

அரியலூரில் நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான தேர்வு

Published On 2023-09-11 08:21 GMT   |   Update On 2023-09-11 08:21 GMT
  • நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான தேர்வு அரியலூரில் 233 பேர் எழுதினர்
  • 233 பேர் தேர்வெழுதிய நிலையில் 140 பேர் எழுத வரவில்லை

அரியலூர்,

மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெறுவதற்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது.தேர்வு எழுதுவதற்காக அரியலூர் மாவட்டத்தில் 373 பேர் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 233 பேர் கலந்து கொண்டனர். 140 பேர் எழுத வரவில்லை. அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தேர்வின்போது ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News