உள்ளூர் செய்திகள்
மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
- மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
- குடும்பத்தகராறு காரணமாக சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது34) கூலித் தொழிலாளியான இவர், மனைவி ஜெயப்பிரியாவுடன் (26) ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக நேற்று முன் தினம் வீட்டில் இருந்த சிறிய தாம்பூலத் தட்டை ெஜயப்பிரியா மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், கழுத்துப் பகுதி வெட்டுப்பட்ட நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயன்றதாக ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.