உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2023-04-17 04:30 GMT   |   Update On 2023-04-17 04:30 GMT
  • தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு நடைபெற்றது
  • ரெயில் நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்

உடையார்பாளையம், 

அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக தீ தொண்டு வார விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகானந்தம், சரவணன், சிங், செந்தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு செந்துறை ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags:    

Similar News