உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-08 14:37 IST   |   Update On 2022-12-08 14:37:00 IST
  • அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • தா.பழூர் ஒன்றிய கிராம மக்களுக்கு

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கு அடிப்படை வசதிக் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உமாதேவி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைத் தலைவர் விக்னேஷ்வரன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிரா மக்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஜெயங்கொண்டத்திலிருந்து தா,பழூர், தாதம்பேட்டை வழியாக அடிக்காமலை கிராமத்துக்கு நகரப் பேருந்து இயக்க வே்ண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News