உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு

Published On 2022-12-03 09:39 GMT   |   Update On 2022-12-03 09:39 GMT
  • பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  • தவறான சிகிச்சை

அரியலூர்:

அரியலூர் காந்தி நகரைச் சேர்ந்த கணேசன் மகள் எழில்செல்வி. இவரது கணவர் பிரபாகர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28.03.2018 அன்று எழில் செல்விக்கு பிரசவ வலி எற்பட்டு, அங்குள்ள ஒரு மகப்பேறு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மதியமே அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. எனினும் அவருக்கு தொடர்ந்து ரத்தப் போக்கு ஏற்படவே, உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 29.3.2018 அன்று எழில் செல்விக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று மாலை அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எழில்செல்வி பெற்றோர் தொடுத்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு, மருத்துவரின் அஜாக்கிரதையால் எழில்செல்வி உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் நிருபணமாகியுள்ளது.

எனவே உயிரிழந்த எழில் செல்வியின் 5 வயது மகளுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இறந்தவரின் பெற்றோர்களை காப்பாளர் கொண்டு இழப்பீடு செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

இதே போல் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெரிடிநந்த் மனைவி சஹானா(32). இவர் தமது தாடையிலும், உதட்டிலும் வளர்ந்த முடியை அகற்றுவதற்காக தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கு கடந்த 18.4.2017 அன்று அவருக்கு லேசர் சிகிச்சை மூலம் முடிகள் அகற்றப்பட்டுள்ளது. அப்போது லேசர் கருவி வெப்பம் காரணமாக சஹானா முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் சஹானா தொடுத்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் சஹானாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.50 ஆயிரம் இழப்பீடாக அவருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News