உள்ளூர் செய்திகள்

ஏரியில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு

Published On 2022-07-26 08:47 GMT   |   Update On 2022-07-26 08:47 GMT
  • ஏரியில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது
  • கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் ெ தரிவித்தனர்.

அரியலூர்:

அரியலூர் அருகே வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரில் உள்ள பாப்பேரியில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை எடுத்தனர். பிறந்து சில நாட்களே ஆன அந்த பெண் குழந்தையின் தலை, கல்லால் நசுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. யாரோ, குழந்தையை கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் ெ தரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News