உள்ளூர் செய்திகள்
70 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய 3 பேர் கைது
- 70 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பாலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல் துறையினர் இரவு வீரசோழபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படியாக சென்ற 3பேரை அழைத்துப் போது, அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சுண்டிபள்ளம் காலனித் தெருவைச் சேர்ந்த ரஞ்சித், மோகன்ராஜ், அபினாஷ் என்பதும், இவர்கள் வீரசோழபுரம் சாலையில் பாலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைந்தனர்.