அசோகன்.
மரக்காணம் அருகே உரக்கடை உரிமையாளரை தாக்கிய அரக்கோணம் வாலிபர் கைது
- 2 வாலிபர்கள் தாக்கினார்கள்.
- அசோகனை போலீசார் தேடி வந்தனர்.
விழுப்புரம்:
பிரம்மதேசம் அருகே முறுக்கேரியில் வைத்திய நாதன் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை கடந்த மாதம் 26-ந்தேதி கந்தாடு பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாக்கினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (வயது 28), அசோகன் (26) ஆகியோர் சம்பவத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதில் சம்பவத்தன்றே ஜீவாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அரக்கோணத்தை சேர்ந்த அசோகனை போலீ சார் தேடி வந்தனர்.
இவர் நேற்று நண்பகலில் பிரம்மதேசம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றதை போலீசார் பார்த்தனர். அவரை பின்தொடர்ந்த போலீசார், மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து அசோகனை கைது செய்தனர். அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அசோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.