உள்ளூர் செய்திகள்

கடலூரில் 29-ந் தேதி நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Published On 2023-08-27 07:33 GMT   |   Update On 2023-08-27 07:33 GMT
  • 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம்.
  • காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ஹாக்கி ஒலிம்பியன் மேஜர் தயான்சந் தை கவுரவிக்கும் வகையில், அவரின் பிறந்தநாளினை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு 29 -ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதால், அதனை நினைவு கூறும் வகையில் கீழ்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

இதில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.25 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர்கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 28 -ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பிவைத்து, போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News