- அண்ணா படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க கொண்டாடப்பட்டது. முன்ன தாக சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல் திருமருகல் தெற்கு ஒன்றியம் பூதங்குடியில் அண்ணாவின் படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதேபோல் 39 ஊராட்சிகளிலும் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.