உள்ளூர் செய்திகள்

வல்லநாடு அருகே டேங்கர் லாரி மீது லோடு வேன் மோதி முதியவர் பலி

Published On 2023-09-27 09:59 GMT   |   Update On 2023-09-27 09:59 GMT
  • டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.
  • இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செய்துங்கநல்லூர்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ராசா சேவியர் மகன் மில்டன். இவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து தனது லோடு வேனில் மீன் ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

டேங்கர் லாரி மோதி விபத்து

இரவு 11 மணிக்கு வல்ல நாடு துப்பாக்கி சுடுதளம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கியாஸ் டேங்கர் லாரியை முந்தி இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.

இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதி கள் முகாமை சேர்ந்த செல்வராஜ் (வயது 62) என்பவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் நெல்லை மாவட்டம் சிங்கம் பாறை சேர்ந்த ஆரோக்கிய ரூபன், இலந்தைகுளத்தை சேர்ந்த வர்கீஸ், திருவேங்கட நாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சந்திரன், திருவேங்கட நாதபுரத்தை சேர்ந்த பெரியதுரை ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்த னர்.

தீவிர சிகிச்சை

இது குறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டேங்கர் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த சண்முகம் என்ப வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News