உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு
- சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார்.
- அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் மேட்டூர் லக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி கொண்டப்பநாயன அள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குருபரபள்ளி போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.