உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே பெண்களுக்கு தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர் மீது தாக்குதல்

Published On 2023-03-15 09:25 GMT   |   Update On 2023-03-15 09:25 GMT
  • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
  • வீடு, வீடாக சென்று பெண்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

கோவை,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுஷாந்த் சாகு (வயது 25). சம்பவத்தன்று இவர் அன்னூர் அருகே உள்ள மாணிக்கம் பாளையத்தில் சந்தே கப்படும் படியாக சுற்றி திரிந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொ துமக்கள் அவரை கட்டி வைத்து தாக்கினர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வடமாநில வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுஷாந்த் சாகு மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், அதனால் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் சுஷாந்த் சாகு, வெளியே சென்றார்.

அதன்பின் சுஷாந்த் சாகு மேட்டுப்பாளையம் கிளப் ரோடு பகுதியில் வீடு, வீடாக சென்று பெண்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறியாத பொதுமக்கள் அங்கும் அவரை பிடித்து கட்டி வைத்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வட மாநில வாலிபரை மீட்டு தனியார் தொண்டு நிறுவனத்தினர் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News