உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மதுபாட்டில் விற்றவர் கைது

Published On 2022-08-30 07:16 GMT   |   Update On 2022-08-30 07:16 GMT
  • திருவெண்ணைநல்லூர் அருகே மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அர்ஜுனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீரிமேடு பகுதியில் புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக எஸ்.பி. ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவரது ஆணையின் படி டி.எஸ் பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் காவலர்கள் கிரிமேடு பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது கிரிமேட்டை சேர்ந்த அர்ஜுனன் (வயது 42) என்பவர் வீட்டின் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்தார். அவரிடம் இருந்து 41 புதுவை மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அர்ஜுனன் மீது வழக்குப் பதிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு செய்து கைது செய்தார்.

Tags:    

Similar News