உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த காட்சி.

நெல்லை-வள்ளியூரில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் சாலை மறியல் - 80 பேர் கைது

Published On 2023-01-24 09:49 GMT   |   Update On 2023-01-24 09:49 GMT
  • ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
  • மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

மத்திய அரசின் தொழி லாளர் கொள்கைகளை எதிர்த்தும், நான்கு சட்ட தொகுப்பை கைவிடக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல்

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் 240 நாட்கள் பணி புரிந்தால் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், எந்த பணி புரிந்தாலும் ரூ. 21 ஆயிரத்திற்கு குறையாமல் மாத சம்பளம் வழங்கிட வேண்டும், நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ரூ. 6 ஆயிரம் குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் நிர்வாகிகள் ரங்கன், பாலகிருஷ்ணன், உலகநாதன், கிருஷ்ணன், பாலு, செந்தில் முருகன், சுடலை கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூர்

இதேபோல் வள்ளியூர் பழைய பஸ் நிலையதில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மணியன் தலைமையில் சேதுராமலிங்கம், முருகன், பாலன், கலை முருகன், சுதாகர், பன்னீர்செல்வம் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Tags:    

Similar News