உள்ளூர் செய்திகள்

பாண்டி கிராமத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம்

Published On 2023-05-20 09:41 GMT   |   Update On 2023-05-20 09:41 GMT
  • வருகிற 30-ந் தேதி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்.
  • போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முத்துப்பேட்டை:

100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையான நிதியை குறைத்து வழங்கியுள்ள மத்திய அரசை கண்டித்து வருகிற மே 30-ந் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை அடுத்த பாண்டி, வேப்பஞ்சேரி ஊராட்சி மற்றும் மங்கலூர் கிளைகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அன்பு செல்வம், சுப்ரமணியன், மங்கல் சம்பத், காசிநாதன் ஆகியோர் சந்தித்து போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது, பாண்டி ஊராட்சியில் 20-க்கும் மேற்ப்டட தொழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கு நிதி அளித்து பாராட்டினர்.

Tags:    

Similar News