உள்ளூர் செய்திகள்
முன்விரோத தகராறு; 5 பேர் மீது வழக்குப்பதிவு
- உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தேன்மொழி புகார் செய்தார்.
- 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (வயது28). இவருக்கும், அதே கிராமத்தில் வசித்து வரும் தாமரைசெல்வி (25) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறுஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பை சேர்ந்தவர்களும் தகாதவா ர்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தேன்மொழி புகார் செய்தார். அதன் பேரில் தாமரைசெல்வி, சுமதி ஆகிய 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதே பிரச்சினை தொடர்பாக சுமதி கொடுத்த மற்றொரு புகாரின்பேரில் மகேந்திரன், தேன்மொழி, பெரியநாயகி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.