உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 50 பி.டி.எஸ் இடங்களுக்கு அனுமதி

Published On 2023-05-31 10:32 GMT   |   Update On 2023-05-31 10:32 GMT
  • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
  • புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரியில் நடப்பு ஆண்டில் 50 பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த பல் மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

சென்னை:

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பின்னர் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த கல்லூரியில் நடப்பாண்டில் 50 பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய பல் மருத்துவ கவுன்சிலிடம் தமிழக அரசு விண்ணப்பித்து இருந்தது. கடந்த மாதம் கவுன்சில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரியில் நடப்பு ஆண்டில் 50 பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த பல் மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News