விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
- 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும்.
விழுப்புரம்:
விழுப்புர மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
திண்டிவனம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனத்தில் 2023-ம் ஆண்டு சேர்க்கையில் சேர்ந்திட எஸ்.எஸ்.எல்.சி, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான ேசர்க்கை 31.7.2023-ந்தேதி வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்கள் அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.