உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் அதிரடி: லாட்டரி டிக்கெட் வியாபாரிகள் கைது

Published On 2022-10-09 07:58 GMT   |   Update On 2022-10-09 07:58 GMT
  • பண்ருட்டியில் லாட்டரி டிக்கெட் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
  • 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார்பண்ருட்டி பகுதியில்தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு நின்றுகொண்டிருந்த பண்ருட்டி கொக்கு பாளையம்ரோட்டைசேர்ந்த அப்துல்மத்தீன்(வயது45),புதுப்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த யுவராஜ் (48), ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவர்களிடம்இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News