உள்ளூர் செய்திகள்

ஆபத்தான பள்ளத்தை படத்தில் காணலாம்.  

வீரபாண்டி தபால் நிலையம் அருகே ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம்

Published On 2022-06-16 07:10 GMT   |   Update On 2022-06-16 07:10 GMT
  • ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
  • நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீரபாண்டி :

திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட பாலாஜி நகர் செல்லும் சாலையில் வீரபாண்டி துணைஅஞ்சல் நிலையம் உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு சின்னக்கரை,கரைப்புதூர், ஏ.பி.நகர்.வித்தியாலம், நொச்சிப்பாளையம், அவரப்பாளையம்*வ,ரபாண்டி. பலவஞ்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் இந்த அஞ்சல் நிலையத்துக்கு வந்து செல்கின்றார்கள்.

இந்தநிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பே அஞ்சல் நிலையம் அருகே உள்ள தார்சாலையின் 2பக்கமும் உடைப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் பாதாளச் சாக்கடை சேதமடைந்துள்ளது.அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் அதற்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் அஞ்சல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags:    

Similar News