உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே விபத்து: இரும்பு தகடு மேலே விழுந்து வடமாநில தொழிலாளி பலி

Published On 2022-11-28 15:13 IST   |   Update On 2022-11-28 15:13:00 IST
  • ஓமில்ஹுக் மீது இரும்பு தகடு ஒன்று விழுந்தது.
  • செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

அசாம் மாநிலம் பிஜாபூர் பகுதியை சேர்ந்தவர் ஓமில்ஹுக் (வயது 18). இவர் ஓசூர் பகுதியில் தங்கி இரும்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஜூஜூவாடி - பேகைப்பள்ளி சாலையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தில் ஓமில்ஹுக் நேற்று வேலை பார்த்த போது அவர் மீது இரும்பு தகடு ஒன்று விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News