பலியான சந்திரகலா, திருமுருகன்
வடலூரில் இன்று காலை விபத்து: லாரி மோதி என்.எல்.சி. தொழிலாளர்கள் 2 பேர் பலி
- இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் இருந்து நெய்வேலிக்கு சென்றனர்.
- சுகுமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சி ப்பாடி அயன்குடி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 45). என்.எல்.சி.யில் வேலைபார்த்து வந்தார். இவரது நண்பர் ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சுகுமாறன். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் இருந்து நெய்வேலிக்கு சென்றனர். வடலூர் சந்திப்பில் சென்ற போது அதே சமயம் பார்வதிபுரத்தை சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி சந்திரகலா (38) என்பவரும் மொபட்டில் வந்தார்.
அப்போது இருவரும் சாலையோரம் வழிவிடுவதற்காக செல்லும்போது அந்த சமயத்தில் டிப்பர் லாரி வேகமாக வந்தது. இந்த லாரி மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது.இந்த விபத்தில் திருமுருகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுகுமாறன், சந்திரகலா ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வரும் வழியில் சந்திரகலா பரிதாபமாக இறந்தார். சுகுமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.