கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவதை படத்தில் காணலாம்.
ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
- மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.
- அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தன.
கிருஷ்ணகிரி,
ஆடி மாதத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.
அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தன. அம்மன் பல்வேறு மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன், காய்கறி அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
அதே போல், புதுப்பேட்டை ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தன.
அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டன. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.