உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே செங்கல்லால் தலையில் அடித்து வாலிபர் கொலை

Published On 2023-10-21 11:56 IST   |   Update On 2023-10-21 11:56:00 IST
  • செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது30), கூலி வேலை செய்பவர். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ஏழுமலை என்பவருடன் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இதன் காரணமாக இருதரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, அடிதடி ஆனது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை அருகில் கிடந்த செங்கல்லால் குமாரை தாக்கினார். இதில் தலையில் அடிபட்டு மயக்கமடைந்த குமாரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழியிலேயே குமார் உயிரிழந்தார். மாமல்லபுரம் போலீசார் ஏழுமலையை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News