உள்ளூர் செய்திகள்
ஏர்வாடியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
- கடந்த 24-ந்தேதி முகம்மது இம்ரான் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
- இதைப்பார்த்த முகம்மது இம்ரானின் தாயார் மீராள் அவரை கண்டித்தார்.
களக்காடு:
ஏர்வாடி வணிகர் மேல முடுக்கு தெருவை சேர்ந்த அகமது பாட்ஷா மகன் முகம்மது இம்ரான் (வயது29). இவர் குவைத் நாட்டில் கேட்டரிங் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந்தேதி முகம்மது இம்ரான் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த முகம்மது இம்ரானின் தாயார் மீராள், அவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த முகம்மது இம்ரான் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது பற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.