உள்ளூர் செய்திகள்

பேட்டையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

Published On 2023-11-05 14:29 IST   |   Update On 2023-11-05 14:29:00 IST
  • சிவக்குமார் டவுனில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
  • கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிவக்குமார் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் சிவக்குமார் (வயது 32). இவருக்கும், நெல்லை பேட்டை சத்யா நகரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணமாகி 50 நாட்களே ஆன குழந்தை உள்ளது. இதனால் சிவக்குமார் பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் இருந்தவாறு டவுனில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் உள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிவக்குமார் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News