உள்ளூர் செய்திகள்
குள்ளஞ்சாவடியில் திருமணமான இளம்பெண் 3-வது முறையாக மாயம்
- கணவரிடம் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.
- உறவினர்கள் ரூபினாவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் ரூபினா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது கணவரிடம் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரூபினாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இவர் ஏற்கனவே 2 முறை வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் அவரது உறவினர்கள் ரூபினாவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில், தற்போது 3-வது முறையாக வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.